வெந்தயக்கீரை சாம்பார்

உடல் குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரை சாம்பார் செய்வது எப்படி ...!!

உடல் குளிர்ச்சி மற்றும் குடல் புண்களை ஆற்றும் வெந்தயக்கீரை சாம்பார்..

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை – 2 சிறுகட்டு,
துவரம்பருப்பு – ஒரு கப்,
புளி – எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்.

* வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும்.

* வாணலியில் கரைத்த புளியைக் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, கீரை வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும்.

* எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சி தரும்; வயிற்றுப்புண் ஆற்றும்.