மூங்கிலில் சுட்ட கோழி

மூங்கிலில் சுட்ட கோழி

தேவையான பொருட்கள் :

நாட்டுக்கோழி - அரை கிலோ
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கொத்தமல்லி தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைகரண்டி
உப்பு தேவையான அளவு
புதினா தலை 1 கைபிடி அளவு
கொத்தமல்லி இலை 1 கைபிடி அளவு
பச்சை மிளகாய் -3
நல்லெண்ணை தேவையான அளவு
பச்சை மூங்கில் குழாய்கள் -2 (வெட்டியது)
பலா இலை -10

செய்முறை :

1. நாட்டுகோழி, அனைத்து தூள்களும், சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா இலைகள் அனைத்தையும் நன்றாக கொத்தும் கத்தியை வைத்து பொடியாக கொத்தி கொள்ள வேண்டும்.

2. நல்லெண்ணை தெளித்து கொண்டு சன்னமாக அனைத்தையும் கொத்த வேண்டும்.

3. இப்பொழுது நல்லெண்ணை கொண்டு மூங்கில் குழாய்களின் உள்ளே தடவி கொள்ள வேண்டும்.

4. அதன் பின்னர் இக்கலவையை மூங்கில் குழாயினுள் முக்கால் பாகம் அளவு நிரப்ப வேண்டும்.

5.இப்பொழுது பலா இலைகளை அதன் வாய் பகுதியில் அடைத்து இரும்பு கம்பியை கொண்டு பலா இலைகள் அடைப்பு அவிழ்ந்து விடாதவாறு கட்டவேண்டும்.

6. பின்னர் தீயை மூட்ட வேண்டும், இத் தீ அடுப்பு கரியை கொண்டு அணல் தணல் பறக்க இருக்க வேண்டும்.

7. இப்பொழுது இந்த மூங்கில் குழாய் செட்களை அடுப்புல இட்டு அணல் தணல் பறக்க வேண்டும்.

8. நமக்கு கறி மசாலா வாடை வரும். இது வேகுவதற்கு சுமாராக 25 நிமிடங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.

9. நாம் கறி கொத்திய கத்தியை கொண்டு மூங்கிலை பிளந்தால் சுட சுட மூங்கில் சுட்ட கோழி ரெடி! !

எண்ணெய் இல்லாமல் செய்யும் முறையும் உள்ளது. இது ஆந்திராவிலும், மலைநாடுகளிலும் பிரபலமானது. இந்த முறையை கீழே உள்ள வீடியோவில் காணலாம். இதை ஜங்கில் சிக்கன் என்றும், தெலுங்கில் பொங்குலோ சிக்கன் என்றும் பெயர். இதே முறையில் மூங்கில் சிக்கன் பிரியாணியும் செய்யலாம். அந்த முறையை இரண்டாவது வீடியோவில் காணலாம்